Friday, 17 December 2010

கருணை குறைந்த கடவுள்..

மனிதம் மரத்துப்போன

மனிதர்கள்(ல்)

மரங்கள் மறைய..

மரமாய் போன மனிதர்களால்

நிரம்பிப்போன மண்!

இயற்கை அன்னை..

அள்ளி தருவதில்லை -இப்போது

அழிப்பதில் அக்கறையாய்

இல்லாதவனை குறிவைத்து

இடியாய் இறங்கும் இயற்கை சீற்றம்

கழனியில் விதைத்து

கன்னத்தில் கை வைத்து

கருணை உண்டா வருணனிடம் எனும் போது

வறண்டு போகும் வானம்

கடன் உடன் பட்டு

நீர் இறைத்து...

கதிர் அறுக்கும் பொழுது

கடனில் மூழ்க வைக்கும் வெள்ளம்

விவாசாயத்தால்...

வெதும்பி- புலம் பெயர்ந்து

வீடு துறந்து..குடிசையில் அடைந்து

கல்லாய் போன கடவுளால்..

கல் சுமந்து, காங்கிரீட் போட்டு....

மனது போல புண்ணாகி போன

கைகளால்...

குறைந்துவிட்ட கூலியை குமையும்

மனதோடு வாங்கி..

வாங்கிய கடன் அடைக்க

பத்திரமாய் குடிசைக்குள் பதுக்கி வைத்தால்...

அக்கினி பகவான்..எமனாகிப்போனானே.....

மனிதம் மறந்த மனிதன் போல..

கருணை மறந்த கடவுளை..

இன்னமும் வணங்குகிறேனே!!!

குறிப்பு:

2004ம் வருடம்..ஸ்ரீபெரும் புதூரில் பணியாற்றிய காலம், 15 தின கூலியை சனிகிழமை பெற்று திங்கள் காலை தீயிடம் பரி கொடுத்தனர் என் மக்கள்! அதில் ஒரு பெண்மணி கருகிய 100 ரூபாய் நோட்டுகளை வைத்துகொண்டு கதறியழதபோது..கடவுளை சபிப்பதை தவிர வேறு என்ன செய்வது!! இன்னமும் இவ்வலம் எங்காவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது..."கடவுள் இருக்கிறாரா??"

No comments:

Post a Comment