Sunday, 15 April 2012

அண்ணல் அம்பேத்கார்-14.04


செருப்பணியாத கால்கள் உண்டு இன்றும்..
செருப்பு கூடாது எனும் செருக்கில்லை இன்று!
சட்டை அணியா மனிதன் உண்டு இன்றும்...
சட்டை கூடாது எனும் சட்டாம்பிள்ளைகள் இல்லை இன்று!
பெண் வன் புணர்ந்தவனும்..
அதை சரியென்று சொன்னவனும்..
சாதீய சதி வளர்த்தவனும்.. வீழ்ந்துவிட்டான் இன்று
அதை வீழ்த்திய ஆயுதத்தில் கூரியது..அம்பேத்காராம்..!
சட்டத்தை மதிக்கும் அனைவருக்கும் நல் தலைவனவன்..
தலித்திற்கு மட்டுமன்று! வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment