Friday, 22 February 2013

நீரின் பணி..

என்ன செய்வது என்று புரியாத போது..
செய்வதை.. அரை குறையாக விட முடியாமல்..
முழுக்க செய்கிறேன்..
விளைவுகள்.. தெரியா!?
வேரில் விழும் நீருக்கு..
அது நெல்லா..இல்லை புல்லா?? தெரிவதேயில்லை..
நெல்லின் வேரில் விழும் நீரும்.. அறிவதில்லை
விளையப்போவது.. மணியா இல்லை பதறா என?
மொத்தத்தில்..இன்று நீராயிருக்கிறேன்..
விளைச்சலில் பங்கில்லை..
விளைவுகளில்..???

No comments:

Post a Comment