Wednesday, 4 August 2010

காதல் உளறல்கள்

நான் இந்த
உலகத்தை காதலிக்கிறேன்..
அவள் இங்கு மலர்ந்திருப்பதால்!

நான் காற்றை காதலிக்கிறேன்
அவளை தொட்டு அது வரும் போது மட்டும்!

நான் மின்னலை காதலிக்கிறேன்
அவளது கண்வீச்சை அது ஒத்திருப்பதால்!

நான் பூக்களை காதலிக்கிறேன்
அவளுக்கு அழகு சேர்க்கும் போது மட்டும்!

நீ எனை காதலிப்பதால்தான்..
இன்னும் எனை ..நான்
காதலித்து கொண்டிருக்கிறேன்..ஏன்
இன்னமும் அதனால்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!

No comments:

Post a Comment