உந்திய உணர்ச்சிகளால்
ஊனமாகி விட்டது உள் மனது!
ஆனாலும் .....
அடிக்கடி முள்ளாய் குத்துகிறது..
பாழ் மனது...
கற்பு வட்டம் தாண்டிய பெண்களை..
கண்கள் தொடரும் போது குருடாகிறது..
தொடரும் உணர்ச்சிகள்..
பய உணர்ச்சியில் தோல்வியுற்ற பின்..
ஆங்காரமாய் விழித்து ஊமையாய் அலறும்!
தவறு முயற்சிகள்..
தோல்வியுற்ற பின்னும்...
தொடர்ந்து துன்புறுத்தும்..
அடுத்த முயற்சி தொடங்கும் வரை!!!???
No comments:
Post a Comment