குளித்தும் குறையவில்லை..கோபம்!!
அலையாடும்..கடலில்
அலைந்தும்...அடங்கவில்லை...!!
வண்டலூர்..சென்றேன்..
உன்னை விட நான் அழகு என்றது..உர்ரங்குட்டன்...!!!
பூங்கா சென்றேன்...
பூத்திருந்த பூக்கள் பிடிக்கவில்லை..வந்திருந்த பூக்களால்..!!!
தனித்திருக்க..
அறையில்..இருந்தேன்..
அழையாமல் வந்தாய்..
என் தலைகோதி..
தரமறுத்த ஒரு முத்தம்..நூறு தந்தாய்..
வாங்க மறுத்து...உன் மடியில்...
தலை கவிழ்ந்தேன்..
தலை பிள்ளையடி நான் உனக்கு...!!!
kadali tharamarutha oru mutham, anal nooru thara irunthal enral en vanga maruthai? Echi pattuvidum enra?
ReplyDeleteanbudan RK