அந்தி நேரம்
மலர்களை ..ரசிக்கும்
மன நிலையில் நான்!
அன்றும்..
கண்மூடி மல்லாந்திருந்தேன்..
மலர்களின் சுகந்தத்தை அனுபவித்த நிலையில்..!
அணிச்சையாய் கண்விழித்தேன்...?
அங்கு பூக்காத பூவின் வாசம் நுகர்ந்து!!!
என் செவிகளில் சிலிர்ப்பு..
ஒரு ஜோடி கொலுசுகளின் கீர்தனையில்..,
என் விழிகளில் கல்கண்டு..
அந்த தேவதையை..கண்டு!!
உழுது போட்ட நிலம் போலாயிற்று மனது...
அவளது உதட்டோரம் ஏற்பட்ட நகைப்பில்..,
பூந்தோட்டத்தில்..ஒரு குயிலோசை..
அவள் உதடுகள் பேசியது வழி விட சொல்லி!!
பாவி..மலர் பறிக்க வந்தவளாம்...
பறித்து விட்டாள் இப்பாவியின் மனதை!!!
இனி...
பூவோடு பூவாய் தினம் பூத்திருப்பேன்..
பூப்பறிக்க வரும் பூவை எதிர் நோக்கி!!!!!
No comments:
Post a Comment