Monday, 19 July 2010

மழைக்காலம்...2

...
...
உருவாகியது..வெற்றிடம்
என் இதயத்தில்...
புயலென மையம்...கொண்டாள்..
என் மனதில்...!!

மறு நாள்...

மனதிற்கினிய..மழை தூறல்
காலை தொடும்..கடல் அலைகள்.......
கடல் அலைகளாய்..என் கண்கள்
ஓயாமல்..அவள் உருவத்தை தேடி!!

ஓங்கி உயரும் அலைகளும்..
பணிந்தன!- அவள் பாதம் தொட..
அவள் கால்கள் .. பின்னின.....
எனை கடக்கையில்..!!

என்னிடத்தில் தயக்கமான..
புன்னகை--- அப்பூவை நோக்கி
ஒரு கோடி பூக்களின்..அபிசேகம்
என் மீது..பதில் புன்னகை!

பார்வை பரிமாறல்களின் ....பிரதிபலிப்பு
பளீர்மின்னல்கள்--வானத்தில்
எங்கள் இதயங்களின் மோதல்
இடிச்சத்தமாய்---மேகத்தில்

தயக்கமாய் பேச முற்பட்டேன்
வலுத்தது--மழை..
தன் குடையை..தன்னோடு
எனக்கும் - அவள்..

இருவருமே ..நனைந்தோம்..
நடுவில் குடை -- இடைவெளி எங்களுக்குள்..
வெட்கமாய் அவளும்..
மௌனமாய் நானும்-- சிரிப்பு..

மழை முழுதும்..நின்ற பின்னும்..
விரித்த நிலையிலே..குடை......
தோள்கள்..இடி பட நாங்கள்!!!

கண் விழித்தேன்..கூரை ஓட்டை வழியே..
வழிந்தது..மழை நீர்......ஓ...
இது ஒரு மழை கால கனவா!!!!???


No comments:

Post a Comment