என் கண்கள் காதல் கனவு சுமக்குமென்று
உன் கண்மலர்களை....
சந்திக்காமல் வேறுபக்கம் திரும்பியிருந்தேன்!
ஏனடி..சில்லறையை
சிதறடித்ததுபோல் சிரித்தாய்...
செவிகள் செவ்வனே செய்தது.........
மூளையை அடைந்தது காதல் அலைகள்...!
கண் திருப்பி..
செவி அடைத்து விலகியிருந்தேன்...
எனை நீ கடக்கையில்....அடித்த காற்று..
நாசிக்கு சொன்னது நின் மணமென்று...
நில்லாது துடித்தது என் மனமது!!
நீ அருகேயே இலாத.....
மொட்டை மாடிதான்.....
வெண்ணிலவு வெட்கமின்றி...
உன் முகமூடியனிந்து...
அங்கே நீ சிரித்தவுடன்...
சிதறியவை விண்மீனாய்...வானில்!!!
என் போர்வைக்குள்...
புகுந்து வெளியேற மறுத்தது.....
உனை தொட்டு வந்த காற்று..!
நிலவு, விண்மீனெல்லாம்...மறைந்து..
கரிய மேகம் கடந்தது..... உடன்..
மனதிலாடியது உன் அலைபாயும் கூந்தல்..!!
என் உலகையே...இருட்டாக்கி.....
கண் மூடி இறுகினேன்..
மூடிய விழிக்குள்....
முழுமதி..நின் முகம்..!!!
உனை மறக்க நினைக்கிறேன்...
முயல்கிறேன்....
மறந்து போவதோ..அந்த எண்ணம் மட்டும்தான்!!!
நீ எனை...
விலக்கி விலகி ...போனாய்......
உன் நினைவுகளை..மட்டும்.......ஏன்
விட்டு போனாய்.!!!!
நிஜமாய்...
அவனது கரம்பிடித்தாய்!!!!!!!
உன் நிழலுக்கு..ஏன்..
எனை காவல் வைத்தாய்!
உனை மறக்க.....
தொடரும்.....2!!!!
No comments:
Post a Comment