உயிர்பெற்ற..கருவறை சுவரை..
எட்டி உதைத்தேன்..!
உதிரம் முறித்து...பால் தந்த
மார்பினை கடித்தேன்..!
சிறு வயதில்..சண்டையில்..
சகோதரிகளை அடித்தேன்..!
வாலிப வயதில்...பெண்களை
கண்ணால் அடித்தேன்...!
காதலித்து கரம்பிடித்தவளை..
கணவனாய் கன்னத்தில் அடித்தேன்..!
நா(ஆ)ண்..
என்ற எண்ணம்..
அதை எப்பொழுது அழிப்பேன்..!!!!
No comments:
Post a Comment