குளிர் காற்று...
மணல் அள்ளி வீசும்..
மணற்புயற் காற்று..
வியர்வையோடு உயிரயையும் வடிக்கும்..
வெப்பக்காற்று..
எதனையும் விலக்க வில்லை ...
நான்????
சுவாசிக்கும் காற்று என்பதால் அல்ல!!
அது..
உன் சுவாசம் கலந்த காற்று என்பதால்!!!
ஒவ்வொரு முறையும்..
ஒவ்வொரு அணுவிலும் நிரப்பி கொள்கிறேன்..
உன் சுவாசத்தை!!!
உனை தொட்ட காற்று..
கடல் கடந்து வரும் என
சுவாசித்தலை அதிகப்படுத்தினேன்!!
எனை சுடும் சூரியனை...
கோலமிடும் கோலமயிலை..
இதமாய் வருடி.....பிரிந்திருக்கும் எனை
கோபமாய் சுடுகிறான்..என்றே எண்ணுகிறேன்!!!
என் அன்பே...
வெயிலில்..வெளியில் வா...
உன் வியர்வை துளி குடித்த பிறகாவது..
இங்கு மழைதுளி பொழியட்டும்...
இந்த மேகங்கள்!!!
No comments:
Post a Comment