உனை காண்பதற்காக..
நான் காத்திருக்கவில்லை..
உன் வழியில் கடக்க
என் வழி விட்டு மாற வில்லையடி!
ஆனாலும்....
உனை சந்திக்கும் அந்த கண நேரம்...
என் விழிகள்..விரிந்து நிலைத்து விடுகின்றன!
தினமும் ...
எனை நான் கண்ணாடியில் உணர்வதால்..
காதல் பிச்சை கேட்க விரும்பவில்லை!!
என்னுள் காதலன்....
கண்ணாடியில் விழிக்கும் போதெல்லாம்...
எரிந்து போகிறான்.....
ஆனால்...
உன் நினைவுகளோ.....
அவனை ஃபீனிக்ஸ் பறவையாய்..மாற்றிவிடுகின்றன!
காதலுக்கு கண்ணில்லை...
எனை காணாதவர்கள் சொன்னது!
எனை அருகில் கண்டால்...
நீ என்ன சொல்வாயோ?????
என் உள்ளத்தின்..அழகை.....
உனக்கு உணர்த்த ......
உன் அழகில் கொஞ்சமாவது...
எனக்கு கிடைத்திருக்கலாம்...!!!!!!!
No comments:
Post a Comment