எனக்கு விருப்பமிலாது போயிற்று!
கனவுகள்.....
கட்டுப்பட மறுப்பவை...
சில நேரம்..
உள் மனதை துகிலுறியும்...
அந்தரங்க..
அபிலாசைகள் அப்பட்டமாகும்...
உண்மையான..
உள்ள ஆசைகள் காட்சிகளாகும்!!
சில நேரம்
நடக்க கூடாதவை நடக்கும்..
என்றும்
நடக்க இயலாதவையும்..நிகழும்...
உலக அழகிகளை..
உள்ளறையில் நிர்வாணமாக்கும்....
நல்லவர்கள்..
என நம்புகிறவர்களை சந்தேகிக்கும்...
துரோகிகளை..
தோளில் சேர்க்கும்..
இதலால்..
எனக்கு விருப்பமில்லை........கனவுகளில்...
விழி திறந்தும்.....
பயணிக்கும் கனவுலகம்...
நினைவுகளில்..
வாழவே நான் விரும்புகிறேன்..!
கனவின் கடவுளை..
அங்கே ..கைது செய்யுங்கள்..!
குற்றங்கள் குறையும்...
இங்கே ..பூமியில்!!
No comments:
Post a Comment