Wednesday, 21 July 2010

மெழுகுவர்த்..தீ

குகைக்குள்ளும்....
உதிக்கின்ற சூரியன்கள்!

உனை ஏற்றுகிற
ஒவ்வொரு கரங்களும்.....
ஒரு வகையில் உனைபோலவே

மின் அமர்ந்த ஓர் இரவில்..
உனை ஏற்றி படிக்கச்செய்த அப்பா..
உனை போல எங்களுக்காக..தேய்ந்து...

உன் வெளிச்சத்தில்...
உணவருந்தும் போது..
உருக்குலையும் போதும்..அழகாய் அம்மா..
உந்தன் அழகான ஒளி போல!!

உன் ஒளியில்..
ஒருங்கினைந்து தளர்ந்த போது..
அதிகம் பளபளத்தன..காமம் வ்டிந்த பின்னும்...
காதல் வடியா..விழிகள்!!

பயணம் தொடங்கி..
மரணிக்கும் வரை...
வெளிச்சம் மட்டுமே தரும் நீ.....
ஏனோ விட்டில் பூச்சிகளுக்கு மட்டும் எமனாய்???

இப்படியே..முடித்து விட்டால்...
விட்டில் பூச்சி போலத்தான் இந்த கவிதையும்!!

பகவத் கீதை படிப்பதில்லை....
நீ தரும் படிப்பினையால்.....
கடமையை செய்வாய்...
கருகும் வரை...
கற்றுக்கொள்வோம்..பிறப்பின் நோக்கமதை!!

No comments:

Post a Comment