சுனாமி மறந்து நான்!
செந்நண்டுகள்..ஒரு வட்டம் விட்டு..
எனை சுற்றி விளையாட..
சுனாமி அலை தொடும் தூரத்தில்..நான்!!
கடல் அலையாய்..கண்கள் அலை பாய...
உணர்ச்சிகள் முந்த படகோரத்தில்---அவர்கள்!!!
பார்க்கும் உணர்ச்சியை வென்று..
கடலை நோக்கினேன்..
கூட்டமாய் யுவ யுவதிகள் கூட்டம்.....
ஒருவர் கரம் ஒருவர் பற்றி கடல் அலையோடு...
போட்டி!!!
கொஞ்சம் பொறாமையும்..ஆற்றாமையும்..
கலந்து ஒரு பெருமூச்சு.........
சில நிமிடம்..காட்சிகள் கலைந்தன..
கரங்கள் மாறி..மாறி பற்றின....!
என்ன கலாச்சாரம்..இது என அதிர்ந்தேன்..
மனதால் சபித்தேன்...
தொடர்ந்து கரங்கள் மாறி .. மாறி பற்றின..
கடல் அலையோடு போட்டியிட்டது..இளமை..
அதிர்ந்திருந்த என் அறிவு..
விழித்துக்கொண்டது..!!!
பாலுணர்ச்சிகள்..மறந்து..
நட்புணர்வு ஓங்கியிருந்த அவர்களின் நிலை..
எனை வெட்கமடைய வைத்தது...
பெண்களின் கண் நோக்கி...
பேச இயலாத..எனை போன்றோரின்..
கண்ணுக்கும்...மனதுக்கும்..
உடன் புரியா உணர்வுகள் அது..
ஆண்..பெண்..அழகிய நட்பு!!
மிகவும் பயனுள்ள தகவல்… .... வாழ்த்துக்கள்....
ReplyDeleteபயனுள்ள தகவல் என்று சொல்லி பகடி செய்கிறார் நம் நண்பர்..
ReplyDelete