என் கற்பனை குதிரயை எழுப்பி தர..
சில பல கவிதை கிறுக்கிய செருக்கில்..
உண்டு களித்து உறங்கி கிடக்கிறது...
யாரவது வாருங்கள்..எழுப்பி தர!
என் கையிருப்பு கவிதைகள்..கரைந்தபின்னும்..
எழும்ப மறுக்கிறது..என் குதிரை
என் நண்பர்கள்..ஓடி கொண்டிருக்கையில்
நகர இயலாமல்.. நான்!
யாரவது வாருங்கள் எழுப்பி தர
உறங்கி கிடக்கிறதா உயிரற்று கிடக்கிறதா?
பார்த்து சொல்லுங்களேன்..
காதலி..மனைவியான பின்..
மறந்து விட்டது..இந்த கலை!
No comments:
Post a Comment